×

கல்லூரி மாணவன் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

வளசரவாக்கம்: தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வரதன் பாபு (20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைமணிக்கும் (63) குப்பை கொட்டுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த கலைமணி கையில் வைத்திருந்த கத்தியால் கல்லூரி மாணவன் வரதன்பாபுவை சரமாரியாக குத்தினார்.

இதை பார்த்த அவரது நண்பர் சஞ்சய் (26) தடுக்க முயன்றார். இதில் சஞ்சயையும், முதியவர் கத்தியால் குத்தினார். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் வந்து காயமடைந்த கல்லூரி மாணவன் உள்பட 2 பேரை யும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து கல்லூரி மாணவன் வரதன் பாபு மற்றும் சஞ்சய் ஆகியோர் கொடுத்த புகாரின்படி, போலீசார் முதியவர் கலைமணி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அதிரடியாக கைது செய்தனர்.

The post கல்லூரி மாணவன் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Varadhan Babu ,Shack Replacement Board ,T. Nagar South Pok Road ,Kalaimani ,Dinakaran ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...